Map Graph

அத்தி வரதர் தரிசனம் 2019

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தரிசனம்

அத்தி வரதர் தரிசனம் 2019 என்பது 2019 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலின் திருக்குளமான அமிர்தசரசு அல்லது ஆனந்த புஷ்கரணி தீர்த்தத்தின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் மூலவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனம் தரும் ஒரு உற்சவம் ஆகும். இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு சூலை 2-ஆம் நாள் அத்திவரதர் திருக்குளத்திலிருந்து எடுக்கப்பட்டார். 1 சூலை 2019 அன்று திருக்குளத்திலிருந்து அத்தி வரதர் எடுக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக காட்சியளிக்கிறார். இந்த தரிசனம் 01.07.2019 முதல் 48 நாட்கள் வரையிலும் நீடிக்கும். 48 நாட்களுக்குப் பிறகு வெள்ளிப்பேழையில் வைக்கப்பட்டு திருக்குளத்திற்குள் அத்தி வரதர் மீண்டும் வைக்கப்படுவார்.

Read article